Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் மாவீரர் அழகு முத்துக்கோனின் குருபூஜை தினத்தையொட்டி அவரக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் குருபூஜை விழா தமிழகம் முழுவதும் நேற்றுக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சி அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் மாவீரர் அழகு முத்துக்கோனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், அறம் மக்கள் நலச்சங்கத்தின் நிறுவனரும், தலைவருமான டாக்டர் சு.ராஜா மற்றும் பொதுச்செயலாளரும், மக்கள் ராஜ்யம் நாளிதழின்ஆசிரியருமான சு.ரமேஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டு அழகு முத்துக்கோன் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன்பின்னர் நடந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரிசி மற்றும் நலத்திட்ட உதவிகளை அறம் மக்கள் நலச்சங்க தலைவர் டாக்டர் சு.ராஜா மற்றும் பொதுச்செயலாளர் சு.ரமேஷ்குமார் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அறம் மக்கள் நலச்சங்கத்தின் துணைத்தலைவர்கள் சாகுல் ஹமீது, இளங்கோவன், மாநிலபொருளாளர் பாபு, மாநில அமைப்புச்செயலாளர் பாதுஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.